Saturday, April 9, 2011

எந்த அளவு டாக்டர்களின் சேவையை உபயோகித்துக் கொள்ளலாம்




என்னுடைய முந்தை பதிப்பில் நம் ஆரோக்கியம் நம் கையில் என்று முடித்திருந்தேன். எப்பொழுது எந்த அளவிற்கு டாக்டர்களின் உதவியை நாடலாம் என்ற கேள்வியை இந்த முடிவானது எழுப்புகிறது.

பல நேரங்களில் நாம் நம் ஆரோக்கியத்திற்காக மருத்துவ நிபுணர்கள் என்று சொல்லப்படுகிறவர்களை சார்ந்தே இருக்கிறோம். அந்த மாதிரி தருணங்களில் சில
கீழ்வருமாறு:

  1. கிருமிகளால் வரும் காய்ச்சல், தோல் வியாதி மற்றும் கடுமையான உடல்
    வலி இருக்கும் போது.
  2. வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி.
  3. விபத்துக்களாலும் ம்ற்றும் விளையாடும் போது உண்டாகும் காயஙகளாலும்.
  4. பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துக்கள்.
  5. விலங்கு மற்றும் மனிதனால் தாக்கப்பட்டு காயம் ஏற்படும போது.
  6. உடலில் ஏதாவது ஒரு பகுதியில் தாங்க முடியாத வலி.
  7. அதிகளவில் உடலிலிருந்து நீர்ச்சத்து வெளியேறும் சமயங்கள்.
  8. அரை அல்லது முழு மயக்கம் ஏற்படும் போது.
  9. மது, மருந்துகளினால் ஏற்பட்ட அதிகமான தெளியாத போதை.
  10. மூச்சு விட சிரமப்படும் போது.
  11. அவசர நேரத்தில் உயிர்காயத்தல்.

நாம் அவசர சிகிச்சைக்காக ஒருவரை மருததுவமனைக்கு அழைத்துச் செல்லும் போது அங்கு முதலில் நடத்தப்படும் அவசரச் சிகிச்சை டிராமாவைப் பார்த்து பதட்டமடையக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அங்கு செய்யப்படுவது எல்லாம் நிஜமானதாகவோ அல்லது நடிப்பாகவோ கூட இருக்கலாம். இபபொழுதெல்லாம் மக்கள் இந்த மாதிரியான நடிப்புக்கெல்லாம் தங்களைப் பழக்கப்படுததிக் கொள்கிறார்கள். ஆனால் முன் அனுபவமில்லாத ஒருவர் அவசர சிகிச்சைக்காக மற்றொருவரை அழைத்துச் சென்று எவ்வளவு செலவானாலும் சமாளிக்க முடியு்ம் என்று சொல்லிவிட்டால் போதும் அந்த நோயாளியின் உறவினர்கள் ஒரு கை பார்க்கப் பட்டு விடுவார்கள். என்றாலும் வேறு வழி இல்லாத காரணத்தால் நாம் ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது..

அறுவை சிகிச்சை என்று வரும் போது எபபோதும் ஒன்றுக்கு இரண்டு மருத்துவர்களின் ஆலோசனை கேட்பதே சிறந்தது. என்றாலும் விபததில் பதிக்கப்பட்டவர் முடிவெடுப்பது சற்று சிரமம். அதிர்ஷ்டமில்லாமல் அடிபட்டவர் அதிர்ஷ்டததைப் பொறுததே எந்த முடிவும் அமையும்.

முடிவுரையாகச் சொ்ல்லப் போனால், மருத்துவர்களைக் கடவுளின் பிரதிநிதிகளாகக் கருதாமல் மற்ற நிபுணர்களைப் போலவே அவர்களின் யோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.

No comments:

Post a Comment